Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உள்ளாட்சி தேர்தலை இப்போது நடத்தமுடியாது: தமிழக அரசு பிரமாணப்பத்திரம்

மே 04, 2019 08:35

வாக்களர் பட்டியலை சரிபார்க்க உள்ளதால் தற்போதைக்கு உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாது என உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

அந்த பிரமாணப்பத்திரத்தில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் இருந்து மாநில தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை இன்னும் பெறவில்லை என்றும், மக்களவை தேர்தல் நடந்ததால் வாக்காளர் பட்டியலை பெற இயலவில்லை என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.  

உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கு உள்நோக்கம் கொண்டது எனவும் தமிழக அரசு அந்த பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்